Latest News

அருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன்


ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‘பிருந்தாவனம்’. இந்தப் படத்தில், காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அருள்நிதி. அவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்நிலையில், மறுபடியும் ராதாமோகன் இயக்கத்திலேயே நடிக்கப் போகிறார் அருள்நிதி. இந்தத் தகவலை, அவரே தெரிவித்துள்ளார். படத்தின் கதை என்ன என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம். ஆனால், ராதாமோகனுடனான கம்ஃபர்ட் லெவல் பிடித்துப் போனதால், கதை கேட்காமலேயே நடிக்கத் தயாராக இருக்கிறார் அருள்நிதி. ஜூலை மாதம் இந்தப் படத்தில் வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.