Latest News

அதிக சம்பளம் கேட்கும் வடிவேலு

வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் சூடு பிடிக்கவில்லை. கொள்கை, கோட்பாட்டையெல்லாம் தளர்த்திக் கொண்டு, ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து வருகிறார். அத்துடன், அவரை ஹீரோவாக்கி அழகுபார்த்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் ஓகே சொன்னார். இயக்குநர் ஷங்கர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க, முதலில் ஒரு பெருந்தொகை சொல்லியிருக்கிறார் வடிவேலு. ஷங்கரும் அதற்கு ஓகே சொல்ல, மிகப் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றிருந்த நிலையில், திடீரென சம்பளத்தை உயர்த்திக் கேட்டாராம் வடிவேலு. தயாரிப்பு தரப்பு அதற்கு மறுப்பு சொல்ல, வடிவேலுவும் விடாப்பிடியாக நிற்கிறாராம். இதனால், பல லட்சம் செலவழித்து உருவாக்கப்பட்ட செட், அப்படியே பாதியில் நிற்கிறதாம். அத்துடன், மற்ற நடிகர்களின் கால்ஷீட் தேதிகளும் வீணாகிறதாம்.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.