Latest News

விஜய்யை இயக்கப் போகிறாரா எஸ்.எஸ்.ராஜமெளலி?


‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் தமிழ் இசை வெளியீட்டு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தனுஷ், யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, கேயார், ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தாணு, “விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள் என்று 2004ஆம் ஆண்டே ராஜமெளலியிடம் சொன்னேன். ஆனால், அவரிடம் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்தது. அதையெல்லாம் முடித்துவிட்டு விஜய்யை நிச்சயமாக இயக்குவார். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்” என்றார். இந்த விஷயம் விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். அப்படி இருவரும் இணையும் பட்சத்தில், அந்தப் படத்தை தாணு தயாரிப்பார் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.