Latest News

சிறகுகளைக் கொண்டு...

விசித்திர உலகத்தில்
விடைதேடும் பறவைகளாய்
வீரிய சிறகுகளை விரித்து
விண்ணுடைத்து அண்டம் துளைத்து அதற்கப்பாலும்
வில்லின் அம்பெனவே
விரைந்தேகி
பறக்கையில்
காணப்போவது கவின்மிகு
காட்சிகளா அன்றி
கடைத்தேற வழியின்றி சிக்கி
சிதறுண்டு இழிநிலை பிறவியென
இகழ்ந்து நகைத்துரைக்கும் கோட்பாடா?
விதியின் கால்களிடை பந்தெனவே
உதைபட்டு அலைக்கழிந்து
உச்சத்திலோ பள்ளத்திலோ....
மயனுலகாய் விரிந்த எழிலுலகம் ஒருபுறம்
மரித்த நிலங்களின் மணல்மேடாய் உயிரிழந்த கோரமுகம் மறுபுறம்..
சிறுதுகளைப் பிளந்தெடுத்து அணுத்துகளாய் அண்டசராசரத்தில் அத்தனையும்
பிரித்தெடுத்து ஆள நினைத்தாலும்
அடுத்து வருவதை அறியாமல்
அழிக்கவொரு வித்தையென
அரை நொடியில் மனித புத்தியினை
வீழ்த்திவிடும் இயற்கையதின்
மனமறிந்து இயைந்தாலே இனித்திடும் வாழ்வுமது..
வெல்ல நினைத்தாலோ வித்தகம்
புரிந்தாலோ
விரலசைவில் வீழ்ந்து விடும்
கோட்டையது....


No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.