Latest News

63 நாயன்மார் வரலாற்று சுருக்கம்...

1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar(கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான்அருளால் இளமை
பெற்றார்.)
2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanarசிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanarநடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanarதன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்
5.விறல்மிண்டர்/Viralminda Nayanarசிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.
6.அமர்நீதியார்/Amaraneedi Nayanarசிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்
7.எறிபத்தர்/Eripatha Nayanarசிவபக்தரின் பூஜைக்குரிய
பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanarகொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
9.கண்ணப்பர்/Kannappa Nayanarபக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும்
நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.
10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanarசாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில்வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காகதூபம் ஏற்றியவர்.
11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanarமறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகியகூந்தலை வெட்டியவர்.
12.அரிவாட்டாயர்/Arivattaya
Nayanarசிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
13.ஆனாயர்/Anaya Nayanarபுல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.
14.மூர்த்தி/Murthi Nayanarசந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்
15.முருகர்/MurugaNayanarவழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தைஓதிக்கொண்டேயிருப்பார்.
16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanarகழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.
17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanarதாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை
வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.
18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanarசிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.
19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanarசிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர்.
பாற்குடத்தைக் காலால் உடைத்ததந்தையின் காலை வெட்டியவர்.
20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanarதேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
21.குலச்சிறையார்/Kulacchirai Nayanarபாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanarசுந்தரருடன் கயிலை
சென்றவர்.
23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyarஇறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanarதிருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட
போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.
25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanarதிருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.
26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigalதண்ணீரால் விளக்கு ஏற்றியவர்
27.திருஞானசம்பந்தர்/Tiru
Jnana Sambandarஞானக் குழந்தை. பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanarஇறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.
29.திருமூலர்/Tiru Mula
Nayanarதிருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.
30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanarகண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.
31.மூர்க்கர்/Murkha Nayanarசூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்
32.சோமாசிமாறர்/Somasira Nayanarநிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.
33.சாக்கியர்/Sakkiya
Nayanarஅன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.
34.சிறப்புலி/Sirappuli Nayanarசிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanarபைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanarசுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
37.கணநாதர்/Gananatha Nayanarசிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.
38.கூற்றுவர்/Kootruva Nayanarநாடாள
முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanarஎறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.
40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyarசுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.
41.அதிபத்தர்/Adipattha Nayanarவலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
42.கலிக்கம்பர்/Kalikamba Nayanarமுன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.
43.கலியர்/Kalia Nayanarவறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.
44.சத்தி/Satti Nayanarசிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanarமன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
46.கணம்புல்லர்/Kanampulla Nayanarவிளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்
47.காரி/Kari Nayanarகாரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara
Nayanarதிருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
49.வாயிலார்/Vayilar Nayanarஇறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப
வாழ்வுபெற்றார்.
50.முனையடுவார்/Munaiyaduvar Nayanarஅரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.
51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanarசிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
52.இடங்கழி/Idangazhi Nayanarஅரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
53.செருத்துணை/Seruthunai Nayanarசிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க
நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanarவறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.
55.கோட்புலி/Kotpuli Nayanarசிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.
56.பூசலார்/Pusalar Nayanarபொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyarசைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.
58.நேசர்/Nesa Nayanarஎப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.
59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanarமுற்பிறவியில், சிலந்தியாய் சிவனை
வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.
60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanarஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்
61.சடையனார் நாயனார்/Sadaya Nayanarசுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
62.இசைஞானியார்/Isaijnaniyarசுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanarதேவாரம்
பாடியவர். சிவ பெருமானின் தோழர்.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.