Latest News

சிகரெட் பிடிக்கும் ரித்திகா சிங்


குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்துள்ள ‘சிவலிங்கா’ படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. இதுகுறித்துப் பேசிய ரித்திகாவிடம், ‘உங்களுடைய கெரியரில், கண்டிப்பாக இதைச் செய்ய மாட்டேன் என முடிவெடுத்திருக்கும் விஷயம் என்ன?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘அப்படி எதையுமே என்னால் முடிவுசெய்ய முடியாது. என்னுடைய கேரக்டருக்கு என்ன தேவையோ, அதைச் செய்தாக வேண்டும். உதாரணமாக, என் வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என்று நினைத்தேன். ஆனால், ‘சிவலிங்கா’ படத்தில் நான் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி இருக்கிறது. கதைக்குத் தேவை என்பதால் அதைச் செய்தேன்’ எனப் பதிலளித்துள்ளார் ரித்திகா சிங்.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.